என் வீட்டு கொலு





  🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷  
🌱                                                                                                       🌱      
 🌷        ஒன்று இரண்டு மூன்று என ஒன்பது படிகள் அமைத்து        🌷
 🌱  ஒன்பதாம் படியில் தசாவதார பொம்மைகள் வரிசைபடுத்தி     🌱
 🌷       எட்டாம் படியில் வித விதமான கண்ணனை நிறைத்து         🌷
 🌱  ஏழாம் படியில் இராமனுஜரையும், ஆழ்வார்களையும் இருத்தி  🌱
 🌷       ஆறாம் படியில் பாரதியும், திருவள்ளுவரையும் வைத்து        🌷
 🌱   ஐந்தாம் படியில் சிங்கமும், புலியும், யானையும உலாவிட்டு     🌱
 🌷       நான்காம் படியில் பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு             🌷
 🌱   மூன்றாம் படியில் டைனோசர்களை  அதிர நடக்க விட்டு        🌱  
 🌷      இரண்டாம் படியில் சங்கு பொம்மைகளை சங்கமித்து         🌷
 🌱  ஒன்றாம் படியில் மரம், செடி கொடிகள்,கனிகள் அமைத்து     🌱
 🌷            அழகாய் கொலு வைத்திட ஆசை ஆசை                         🌷
 🌱  ஆசை தீரும் காலம் எப்பொழுது என தெரியாத நிலையில்      🌱
  🌷       பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல்                    🌷
  🌱  பொம்மைகள்  இடத்தில் என் எழுத்தை வைத்துள்ளேன்         🌱
  🌷     இதோ என்  மஞ்சள்,குங்குமம்வெற்றிலைபாக்கு          🌷
  🌱  ஒரு நாள்  பொம்மைகள் என்னை வந்து அடையும்  பொழுது   🌱
  🌷       ஒன்று இரண்டு மூன்று என ஒன்பது படிகள் அமைத்து....      🌷
   🌱                                                                                                       🌱
          🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷   
          

No comments:

Post a Comment