லிங்கா (No spoilers)

"லிங்கா"வை பற்றி எழுதுவதற்கு முன்னால்,  சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

எனக்குக் கத்திரிக்காய் பிடிப்பதில்லை.  அதனால் நான் அதை சாப்பிடுவதில்லை.  ஆனால் கத்திரிக்காயைப் பற்றி மட்டமாகவோ, கத்திரிக்காயை விரும்பி சாப்பிடுபவர்களைப் பற்றி தரக் குறைவாகவோ கட்டாயமாக நான் பேசியதில்லை, பேசவும் மாட்டேன்.  மேலும் எங்கேல்லாம் கத்திரிகாயைப் பற்றி எழுதி இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று "கத்திரிக்காயைப் போல மட்டமான காயை நான் பார்த்ததில்லை.  இந்த மட்டமான கறிகாயை உண்பதற்கு பதில் பட்டினியாய் இருக்கலாம்," என்று சாப்பிடுபவர்களின் மனம் புண்படும் படி என் கருத்தைச் சொல்ல மாட்டேன்.  முதலில் அதற்கு எனக்கு  நேரமும் இல்லை,  இரண்டாவது அவசியமும் இல்லை.  படிப்பறிவில்லாத நான் எனக்கு பிடிக்காத கத்திரிக்கயை விட்டு விலகி இருக்கும் போது, இந்த ஊடகம் முழுவதும் உள்ள மெத்த படித்த மக்கள் தங்களுக்கு பிடிக்காத ரஜினியை விட்டு ஏன் விலகி நிற்க மறுக்கிறார்கள்?  எங்கெல்லாம் மக்கள் "லிங்கா" வைப் பற்றி தங்கள் சந்தோஷத்தை தெரிவிக்கிறார்க்ளோ, அங்கெல்லாம் சென்று தங்கள் அவதூறான கருத்துக்களை ஏன் பதிக்கிறார்கள்?   "நல்ல கதையா இருக்கே,  எங்களுக்கு அந்த சினிமா பிடிக்கல, அத பத்தி நாங்க சொல்ல கூடாதா?" என்று கேட்டால், கட்டாயமாக, சொல்லாம்.  எங்கே? உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கே உங்கள் கருத்துக்களை, பொறுமல்களை, கோவங்களை  தாராளமாக பதிவு செய்து கொள்ளுங்கள். அதை விடுத்து  மற்றவர்கள் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் போது, விலகி செல்லாமல், ஏன் கண், காது, தலை, மூக்கு என்று எல்லாவற்றையும் நுழைத்து மனதை வலிக்க செய்கிறார்கள்?  இது  ஏதோ ஒன்று இரண்டு சம்பவம் அல்ல.  ஊடகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சம்பவம் இது.

"நீ ரொம்ப ஒழுங்கா, கமல் என்பவரைப் பற்றி நீ உன் வாய்க்கு வந்த படி பேசவில்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.  ஆம் பேசினேன்.  எங்கே? என் இடத்தில். மற்றவர்கள் இடத்தில் அல்ல. ஒன்று சொல்ல ஆசை படுகிறேன்.  கமல் என்பவர் எனக்கு எதிரி அல்ல.  அவரின் படங்களான பஞ்சதந்திரமும், வசூல் ராஜாவும் எவ்வளவு முறை பார்த்தேன் என்பதை என்னால் கணக்கிட முடியாது.   நான் பேசியது கமல் அவர்களின் கொள்கைக்கு மாறான செயலைப் பற்றியது. கடவுள் இல்லை என்பது அவர் கொள்கை.  அவரின் கொள்கையில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் கடவுள்  இல்லை என்று சொல்லிவிட்டு, பின்  தன் படத்திற்கு எல்லாம் கடவுள் சார்ந்த பேரை வைப்பது,  கடவுளைக் கண்டபடி கையாள்வது போன்ற அவரின் முறணான செய்கையைத் பற்றிய  காழ்ப்புணர்ச்சியை தான், என் இடத்தில் கொட்டித் தீர்த்தேனே தவிர, வேறு எங்கும் சென்று என் கருத்தை சொல்வில்லை.

"லிங்கா" படமே ஓட்டை,  படத்தில் லாஜிக்கே இல்லை என்று, தமிழ் படங்கள் எல்லாவற்றிலும் "ஓட்டையே" இல்லாதது போலவும், "லாஜிக்"எல்லா தமிழ் படங்களிலும் நிரம்பி வழிவது போலவும் பேச்சு.  மரத்தை சுத்தி பாடும் போதே "லாஜிக்" போய்விட்டது.   இதில் "லிங்கா"வில் மட்டுமே "லாஜிக்" இல்லை என்பது என்ன வாதம்?  மேலும் எந்த படத்தில் ஓட்டை இல்லை.  தசாவதாரத்தில் இல்லையா, வீரத்தில் இல்லையா, கத்தியில் இல்லையா,  பயணத்தில் இல்லையா?  ஓட்டை இல்லாத படங்கள் "ஆஸ்கார்"க்கு மட்டுமே தேர்ந்தேடுக்கப்படும்.  எங்களுக்கு "ஆஸ்கார்" படங்கள் தேவையில்லை.

தன் குழுந்தைக்கு என்ன வேண்டும் என்று ஒரு தாய்க்கு தெரியும்.  அதே போல் ரஜினி என்பவர் தன் ரசிகர்களுக்கு என்ன  வேண்டும் என்று தெரிந்து அதை "லிங்கா"வில் கொடுத்திருக்கிறார்.  பிரிட்டிஷ் காலத்து "ரஜினி" அம்சமாய், ஹேண்ட்சம்மாய் இருக்கிறார்.  வயசானாலும் "ரஜினி" ஸ்டைல் அப்படியே இருக்கிறது.  அவருக்கே உரித்தான நகைச்சுவை படம் முழுவதும் தூவப்பட்டிருக்கிறது.  கடைசிக் காட்சியில் வெடிகுண்டை காலால் ஸ்டைலாக உதைக்கும் போது இது ரஜினியால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது.  சந்தானம், அனுஷ்கா இருவரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தில் மிளிர்கிறார்கள்.  ரஜினி தவிர இந்த படத்தில் பிடித்த அம்சம் "தண்ணி" காட்சிகளும், முகத்தை சுளிக்க வைக்கும் "கவர்ச்சி" காட்சிகளும் இல்லாதது.   குழந்தைகளோடு  நிம்மதியாய், பயமின்றி பார்க்க முடிந்தது.   பிடிக்காத விஷயம்  இந்த காலத்து ரஜினி மேக்கப், சோனாஷி சின்ஹா, பாடல்கள்.  எங்கோ சோலையூர் என்ற சிறிய தமிழ் கிராமத்தில் நடக்கும் கதைக்கு சோனாஷி சின்ஹா பொருந்தவே இல்லை.  தமிழ் முகமும் அவருக்கு இல்லை, கிராமத்து முகமும் இல்லை.  ஒட்ட வைத்தது போல் தனியாய் தெரிகிறார்.  "ஓ நண்பா" பாடலைத் தவிர வேறு எதுவும் மனதில் ஒட்டவில்லை.  ஏ.ஆர். ரஹ்மானிடம் பிடிக்காத விஷயம் தமிழ் நன்றாய் பாடத் தெரிந்த எத்தனையோ கலைஞர்கள் இங்கு இருக்கும் போது, வட நாட்டு பாடகர்களை தமிழில் பாட வைத்து, பாடலையும், பாடல் வரிகளையும் புரியாமல் இருக்கும் படி செய்து விடுகிறார்.

ரஜினி அருள் இருப்ப்வர்களுக்கு "லிங்கா" தெரியும்.  அருள் இல்லாதவர்களுக்கு…..!!!!!


2 comments:

  1. Fantastic review..
    Not just the music/songs the whole background music was a let down as i felt.
    Climax fight could have been done much better way though.
    Lesser "punch dialogues" was replaced by more intense emotional
    scenes which connected with the fans and family audience.

    Not to mention the lead actor's performance though..

    ReplyDelete