கண்ணே, கனியே…….(கணவனின் சத்தியம்)

அஹம், அஹம்…..தலைவர் பிறந்த நாள் வருது.  கையும் ஓடல, காலும் ஒடல.  சரி, சரி,  பிறந்த நாளப் பத்தி அப்புறம் பேசுவோம்.  வந்த வேலைய பாப்போம்.

கோச்சடையான் படத்துல "மணமகனின் சத்தியம்", "மணப்பெண்ணின் சத்தியம்" பாட்டு கேட்டிருக்கீங்களா?  ரொம்ப சூப்பரா இருக்கும்.   நான் நிறைய தடவை கேட்டிருந்தாலும், நேத்து கேக்கும் போது தான் "பல்பு" அடிச்சுது.  அது என்னனா,  "மணமகனின் சத்தியம்" பாட்டுல ஒரு வரி வரும்.

      "மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்."

அட..அட..அடா.   தீர்க்க தரிசியாய்,  எப்பவோ வரப் போற "மறையும் வயது"  பற்றி பாடியதற்கு ஒரு "ஓ" போட்டாலும், மாதம், மாதம் வரும் "மாத சுழற்சி" க்கு யார் பாட்டு பாடறது?  சரி, அதுக்குக் கூட வேண்டாம்.  "மாத சூழற்சி"க்கு முன்னால ஐந்து நாளோ, பத்து நாளோ "P.M.S" என்ற emotional roller-coasterஆல, "அந்நியன்" விக்ரம் மாதிரி ஒரு நிமிஷம்  சிரிப்பு, அடுத்த நிமிஷம் கோவம், அதுக்கு அடுத்த நிமிஷம் அழுகைனு கஷ்டபடறோமே அதுக்கு யாரு பாட்டு பாடறது?  நான் தேன்…..

(வைரமுத்து சார், உங்க பாட்ட கையாண்டதுக்கு, மன்னிச்சுருங்க)



கண்ணே, கனியே…….(கணவனின் சத்தியம்)
(அந்த ஐந்து/பத்து நாட்களுக்காக கணவன் செய்யும் சத்தியம்)

கண்ணே கனியே உன்னை நெருங்கவும் மாட்டேன்
சத்தியம் சத்தியம், இது சத்தியமே.

மாலை சூட்டிய காதல் கண்மணி கேளேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

உன் அன்னை போலே, அன்பு தந்தை போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது.


மாதம் வரும் நாட்களில் நான் கவனம் கொள்வேன்.
நிமிடம் தோறும் மாறும் உன் மேல் பிரியம் கொள்வேன்.

கோபம் கொண்டு சீறும்போது மொளனம் காப்பேன்.
சோகம் கொண்டு துவளும் போது துணையாய் நிற்பேன்.

அந்நாளில் உனை நானும் புரிந்து கொள்வேன்.
உன் மனது இதமாக வழிகள் பார்பேன்.

(கண்ணே கனியே உன்னை நெருங்கவும் மாட்டேன்
சத்தியம் சத்தியம், இது சத்தியமே.)



சோர்ந்து போகும் நேரம் உந்தன் தாய் போல் இருப்பேன்.
பிள்ளை, பாடம், சமையல், வேலை கையில் கொள்வேன்.

மாத சூழற்சி மறையும் வரை பொறுமை காப்பேன்.
மறைந்து மீண்டும் பூக்கும் உன் மேல் கர்வம் கொள்வேன்.

உன் வலிகள் நலமாக இவையும் செய்வேன்.
நம் வாழ்வு மண்ணில் மலர எவையும் செய்வேன்.

(கண்ணே கனியே உன்னை நெருங்கவும் மாட்டேன்
சத்தியம் சத்தியம், இது சத்தியமே.)





No comments:

Post a Comment