தாய் மண்ணே வணக்கம் - பாகம் II

சிங்கம் மட்டும் தான் இரண்டாம் பாகமா?எங்களுக்கும் இரண்டாம் பாகம் பண்ணத் தெரியும், நாங்களும் பண்ணுவோம்.....அப்படி எல்லாம் சொல்லலை.  போன வருஷம் தாய் மண்ணே  முதல் பாகம் எழுதிட்டு தாய் மண்ணுக்கு போயிட்டதனால,  நேரம் இல்ல.  அதான் இந்த வருஷம் இரண்டாம் பாகம் - Video. எவ்வளவோ யோசிச்சு நல்லா பண்ணனும்னு நினைச்சேன்.  நேரமின்மை காரணமாக ஏதோ என்னால முடிஞ்சத எக்குத் தப்பா பண்ணிருக்கேன்.  அதுவும் கடைசில தான் கொஞ்ஜம் சொதப்..........நானே சொல்லணுமா, இத்தனை வருஷம் தாயா பிள்ளையா பழகினதுக்கு அப்புறமும் என்ன  பத்தி தெரியாதா?என்ன பண்ணிருக்கேன்னா....பாருங்க, பாத்தாதானே தெரியும்.

பாக்கறதுக்கு முன்னாடி, தாய் மண்ணே வணக்கம் பாகம் ஒன்றிலிருந்து, ஒரு சின்ன recap .

 "நமது விமானம் இன்னும் சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும்", என்ற குரல் காதில் விழ, வயிற்றில் சுழன்று கொண்டிருந்த அந்த ஒன்று, உருண்டை வடிவம் பெற்று  நம் தொண்டை குழியில் வந்து சிக்கும்.  விமான ஜன்னலின் வழியே  மீனம்பாகம் விமான நிலையத்தின் மஞ்சள் விளக்குகள் பளிச் பளிச் என்று மின்னுவது தெரியும்.  விமானம் ஓடுகளத்தில் ஓடிவிட்டு மெல்ல தன் இடத்தில் வந்து நிற்கும். 

      "தற்போது நமது விமானம் சென்னை  விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது……" என்று ஏதேதோ ஒலி பெருக்கி வழியே வர, அதை காது குடுத்து கேட்கும் நிலையில் எவரும் இருக்க மாட்டார்கள்.  தூக்க கலகத்தையும் மீறி எல்லோர் முகத்திலும் ஒரு பரபரப்பும்,  ஒரு சிறு சந்தோஷமும் ஒட்டிக் கொண்டிருக்கும். கொண்டு வந்திருந்த சுமைகளை எடுத்துக் கொண்டு  ஒவ்வொருவராக அடித்துப் பிடித்துக் கொண்டு நகர, அவர்களுக்கு எல்லாம் வழிவிட்டு குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் மெதுவே விமானத்தின் வாசல் வர, விடிந்தும் விடியாத சென்னையின் காலை பொழுது கண்களுக்கு விருந்தாகும்.



No comments:

Post a Comment